Tamil Department

விருந்து போற்றுதும்!

food-bg

About The Event

ஆம் விருந்தே புதுமை.

அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இது கேள் மண்உயிர்க்குஎல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும்

அல்லது கண்டதுஇல்” என்கிறது மணிமேகலை.என்ற வாக்கிற்கிணங்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4.9.2023 அன்று சுற்றுப்புறத்தூய்மை பணியாளர்களுக்கு , உணவோடு, அவர்தம் உணர்வுகளையும் குழைத்து வாழையிலையில் விருந்து படைத்தனர். அவர்களின் தேவைக்கேற்ப பார்த்துப் பார்த்துக் கவனித்தனர். வாழையிலையில் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதினையும் எடுத்தியம்பினர். அதாவது,

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

இதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலக்க வாய்ப்பு உள்ளது.

பெரியோர்களே! இவ்விருந்தின் வாயிலாகத் தாங்களும் வாரம் ஒருமுறையாவது வாழை இலையில் சமைத்த உணவை தலைவாழையில் தங்களுடைய சுற்றம் சூழ சாப்பிட வேண்டுமென்றும் நல்லுரை வழங்கினர்.

அது மட்டுமா?

கூடுதலாக இருந்த உணவினை பெசன்ட்நகரிலுள்ள உதவும்கரங்களுக்கு , திருமதி.புனிதா ஆசிரியர் உதவியுடன் இம்மாணவர்கள், தங்களுடைய உதவிக்கரங்களை நீட்டினர்.

நன்றி.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *