Tamil Department

 தமிழ்மன்றத் தொடக்க விழா

DSC_0013

About The Event

தமிழ்மன்றத் தொடக்க விழா, கல்வி வளர்ச்சி நாளான ஜுலை 15ஆம் நாள் திங்கட்கிழமையன்று குத்துவிளக்கேற்றி எங்கும் தமிழ் மணக்க என்ற கரவொலியோடு தொடங்கப்பட்டது. இவ்விழாவினை , கதாசிரியரும், சின்னத்திரை, சினிமா எனப் பல தளங்களில் பயணிப்பவருமான எழிச்சூர் அரவிந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இந்த இனிய நாளில்,தமிழ்மன்றப் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.   

                   தமிழ்மன்றத் தலைவர் – பா.மஞ்சுஶ்ரீ வகுப்பு 9

      தமிழ்மன்றத் துணைத் தலைவர் – தி.கிருத்திக் – வகுப்பு 8

        தமிழ்மன்றச் செயலாளர்       –  சு.மித்திலேஷ்- வகுப்பு 7

இவ்விழாவினைத் தொடர்ந்து,தமிழ்மன்றத் தலைவர்களுக்குத் திரு.எழிச்சூர் அரவிந்தன் அவர்கள் பதக்கங்களைப் பளிங்குக்கற்களாக அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் காமராசரின் நாடகத்தினைச் சீரும் சிறப்புமாக அரங்கேற்றினர் .மேலும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் காமராசர் கொண்டு வந்த பல திட்டங்களைப் பற்றிப் பேசினர். திரு.எழிச்சூர் அரவிந்தன் அவர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் உயர்ந்த எண்ணத்தில் தன் அனுபவங்களைத் தொட்டும் தொடாமலும் பேசினார். காமராசரை முன்மாதிரியாகவும் கருதி பேசினார். இவ்வாறு, விழா இனிதே நிறைவுற்றது.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *